உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Tuesday, February 26, 2019

நூல் அன்பளிப்பும் அங்கத்தவர் இணைப்பும்.

"நூல் அன்பளிப்பும் அங்கத்தவர் இணைப்பும்" நிகழ்வு 25-02-2019 திங்கட்கிழமை உருத்திபுரம் விளையாட்டுக்கழக சனசமூக நிலையத்தில், உருத்திரபுரம் சனசமூக நிலையத் தலைவர் திரு.இ.கேசவன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறிதரன், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் திரு.த.குருகுலராஜா, ஓய்வு பெற்ற அதிபர் திரு. ச.மு.அருளம்பலம், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் கௌரவ சு.வேழமாலிகிதன், அ.சத்தியானந்தன் (கௌரவ பிரதேசசபை உறுப்பினர்) கமலம் ஊக்குவிப்பு மையம், கண்டாவளைப் பிரதேச கிராம அலுவலர் திரு. அ. சிம்சன் போல், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அ.சசிக்குமார், சனசமூக நிலைய ஆரம்பகால நிர்வாக உறுப்பினர் திரு.ஆ.நீலாம்பாள் உட்பட சிறுவர்கள், இளையோர், பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பின்வரும் சமூக ஆர்வலர்களால் நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

1) அமரர் மருத்துவமாமணி ச.மு கோபாலப்பிள்ளை நினைவாக குடும்பத்தினர்
2) திரு. ச.மு.அருளம்பலம் (ஒய்வு நிலை அதிபர், உருத்திரபுரம்)
3) திரு.கந்தையா விக்கினேஸ்வரன் (கிருபா கனடா) (சிவா, கவின், கலா நினைவாக)
4) அ.சத்தியானந்தன் (கௌரவ பிரதேசசபை உறுப்பினர்) கமலம் ஊக்குவிப்பு மையம்
5) திரு. ஞானம் இந்திரா (பிரான்ஸ்)

வாசிப்பின் முக்கியத்துவத்தையும், வாசிப்பு எவ்வாறு சமூகத்தை நல்வழிப்படுத்துகிறது என்பதையும் விளக்கி அதன்பால் எமது இளைய சமூகத்தை உள்வாங்கவும் நடைபெற்ற இந்த நிகழ்வை மிகவும் சிறப்புற நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமது நன்றிகள்.

[Editing and reproducing images of this album for commercial and other purposes without the permission of owner is prohibited and is considered as a copyrights violation.] Photographed By : Mâhî Màhiñťhañ Uruthirapuram Sports Club - All Rights Reserved -

- உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் -































































Share: