உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் "எம் கிராமம்" திட்டத்தின் இரண்டாவது சிரமதானப்பணி உருத்திரபுரீச்சரம் ஆலய சுழலில் இன்று (19-02-2019) இடம் பெற்றது. சிவராத்திரி பூசை நிகழ்விற்கு தயாராகிவரும் உருத்திரபுரீச்சர ஆலயத்தின் சூழலை துப்பரவு செய்ய வேண்டிய பணியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்த சமூகப் பணியில் பங்கெடுத்த கழக உறுப்பினர்கள் ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.